செய்திகள்
சார்லி பாதம், அவரது தந்தை

6 மாதங்களில் எவரெஸ்ட் சிகரத்துக்கு இணையான உயரத்தை அடைந்த 5 வயது சிறுவன்

Published On 2019-12-05 10:14 GMT   |   Update On 2019-12-05 10:14 GMT
பிரிட்டனின் உயர்ந்த 19 சிகரங்களை 6 மாதங்களில் அடைந்ததன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்திற்கு இணையான உயரங்களை தொட்ட ஐந்து வயது சிறுவனின் சாகசம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்:

மலையேற்ற சாகசம் என்பது சவாலான ஒன்று. உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர்களும் உண்டு, அந்த முயற்சியில் உயிரை இழந்தவர்களும் உண்டு. உலகிலேயே மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரம் இதன் உயரம் 29,029 அடியாகும் (8,848 மீட்டர்). எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து பலரும் சாதனை படைத்துள்ளனர்.  

இந்நிலையில், பிரிட்டனின் 19 உயர்ந்த சிகரங்களை அடைந்ததன் மூலம் எவரெஸ்ட்க்கு இணையான உயரத்தை அடைந்த 5 வயது சிறுவன் புதிய சாதனை படைக்க உள்ளார்.

இங்கிலாந்தின் யார்க்சையர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லி பாதம். ஐந்து வயதான இச்சிறுவன் பிரிட்டனில் உள்ள உயரமான சிகரங்களில் 19 சிகரங்களில், 6 மாதங்களில் ஏறி சாதனை படைத்துள்ளான்.



இது குறித்து சார்லியின் தந்தை கூறுகையில், ‘எனது மகனின் திறமை ஆச்சரியமளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 19 சிகரங்களை அடைந்துள்ளான். இங்கிலாந்தின் மிக உயர்ந்த சிகரமான ஸ்கேஃபெல் மலையிலும் (3209 அடி) கால் பதித்துள்ளான். கிட்டத்தட்ட 30 ஆயிரம் அடிகள் உயரம் ஏறியுள்ளான். இது உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்திற்கு இணையானதாகும். மிகக்குறைந்த வயதில் இத்தனை ஆயிரம் அடிகளை ஏறி சாதனை புரிந்த சார்லியின் சாகசத்தை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்’ என்றார்.
Tags:    

Similar News