செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பீதி
இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
ஜகார்தா:
இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று இரவு 9.47 மணிக்கு கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் சுலவேசி தீவிலும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் கூறி உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலைகள் எழும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தோனேசிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மனோபா நகரில் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டனர். ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுலவேசி தீவுகளில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நள்ளிரவில் 5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று இரவு 9.47 மணிக்கு கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் சுலவேசி தீவிலும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் கூறி உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலைகள் எழும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தோனேசிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மனோபா நகரில் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டனர். ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுலவேசி தீவுகளில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நள்ளிரவில் 5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.