செய்திகள்
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றடைந்தார் மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் பிரேசில் நாட்டை சென்றடைந்தார்.
பிரேசிலியா:
பிரேசில் நாட்டில் இன்றும், நாளையும் (நவம்பர் 13, 14), 11-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார்.
இந்த மாநாட்டின் இடையே பிரேசில் அதிபர் போல்சோனரோ, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை மோடி சந்தித்து பேசுகிறார்.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் பிரேசில் நாட்டை சென்றடைந்தார். தலைநகர் பிரேசிலியாவில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.