செய்திகள்
சாலை விபத்து

உகாண்டா - லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி

Published On 2019-10-22 14:02 GMT   |   Update On 2019-10-22 14:02 GMT
உகாண்டாவில் கரும்புகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கம்பாலா:

உகாண்டா நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஜிஞ்ஜா மாவட்டம். இந்த மாவட்டத்தில் நேற்று இரவு கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உகாண்டாவில் ஓவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 ஆயிரம் விபத்துக்கள் நடக்கின்றன. அதில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர் என அங்கிருந்து வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News