செய்திகள்
அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள புரூக்ளின் நகரில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட புரூக்ளின் நகரில் உள்ள உட்டிக்கா அவென்யூ பகுதியில் ’டிரிபில் ஏ ஏசஸ்’ என்னும் சூதாட்ட கிளப் இயங்கி வருகிறது.
இந்த கிளப்பில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரி பெண் உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டது யார்? காரணம் என்ன? என்பது தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக புரூக்ளின் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட புரூக்ளின் நகரில் உள்ள உட்டிக்கா அவென்யூ பகுதியில் ’டிரிபில் ஏ ஏசஸ்’ என்னும் சூதாட்ட கிளப் இயங்கி வருகிறது.
இந்த கிளப்பில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரி பெண் உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டது யார்? காரணம் என்ன? என்பது தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக புரூக்ளின் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.