செய்திகள்
துப்பாக்கிச் சூடு நடந்த இடம்

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு

Published On 2019-10-12 13:11 GMT   |   Update On 2019-10-12 13:11 GMT
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள புரூக்ளின் நகரில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட புரூக்ளின் நகரில் உள்ள உட்டிக்கா அவென்யூ பகுதியில் ’டிரிபில் ஏ ஏசஸ்’ என்னும் சூதாட்ட கிளப் இயங்கி வருகிறது.

இந்த கிளப்பில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரி பெண் உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டது யார்? காரணம் என்ன? என்பது தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக புரூக்ளின் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News