செய்திகள்
மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி 9 பேர் பலி
மெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
லா பாஸ்:
மெக்சிகோவின் குவரிடாரோ மாநிலம், சான் ஜூவான் டெல் ரியோ நகரில் சென்ற பயணிகள் பேருந்து, ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில், அந்த பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, தலைகீழாக கவிழ்ந்தது. பேருந்தின் இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
பின்னர் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் நிகழ்ந்த இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டிரைவர் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரெயில் வருவது தெரிந்தும் பஸ் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மெக்சிகோவின் குவரிடாரோ மாநிலம், சான் ஜூவான் டெல் ரியோ நகரில் சென்ற பயணிகள் பேருந்து, ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில், அந்த பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, தலைகீழாக கவிழ்ந்தது. பேருந்தின் இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
பின்னர் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் நிகழ்ந்த இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டிரைவர் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரெயில் வருவது தெரிந்தும் பஸ் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.