செய்திகள்
துருக்கி விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 9 பேர் பலி
ஈராக் நாட்டின் எல்லைக்குள் துருக்கி நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 9 பேர் உயிரிழந்தனர்.
இஸ்தான்புல்:
ஈராக்கில் உள்ள குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஷ்தான் போராளிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.
இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஈராக் நாட்டின் ஹாக்ருக் மற்றும் ஹெப்டென் ஆகிய பகுதிகளில் உள்ள குர்திஷ்தான் போராளிகளை குறிவைத்து துருக்கி நாட்டின் விமானப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 9 குர்திஸ் போராளிகள் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.