செய்திகள்
பிலிப்பைன்சில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்சின் மிண்டானா தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானா தீவுப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.02 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. பாதிப்பு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.