செய்திகள்
ஈராக் படையினர் ( கோப்பு படம்)

ஈராக்: ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் 12 பேர் பலி

Published On 2019-09-26 12:41 GMT   |   Update On 2019-09-26 12:41 GMT
ஈராக் நாட்டில் ராணுவம் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐஎஸ் அமைப்பினர் உள்பட 12 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பாக்தாத்:

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது கொரில்லா போர்முறை பாணியில் அதிரடியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 



இந்நிலையில், ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அன்பார் மாகாணம் மற்றும் சலதீன் கவர்னோரேட் ஆகிய பாலைவனம் பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஈராக் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதிகளை குறிவைத்து ஈராக் அரசு படைகள் படையினர் திடீர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News