செய்திகள்
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்து 20 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 90 பேர் காயம் அடைந்தனர்.
காபூல்:
ஆப்கானிதானின் தெற்கு பகுதியான கலாட்டில் உள்ள மருத்துவமனையில் தலிபான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 20 பேர் பலியானார்கள். மேலும் 90 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி சேதமானது. காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.