செய்திகள்
இலங்கை தேர்தல் ஆணையம்

இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்

Published On 2019-09-18 14:45 GMT   |   Update On 2019-09-18 14:45 GMT
இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும். அதற்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்குகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொழும்பு:

இலங்கையின் தலைமை தேர்தல் ஆணையர் மஹிந்தா தேஷப்ரியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும். அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது  என அறிவித்துள்ளார்.

இலங்கையின் எஸ்எல்பிபி கட்சி சார்பில் கோத்தபயே ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அறிவித்துள்ளது. அதேபோல், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அனுரா குமாரா திஷனாயகே அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். 
Tags:    

Similar News