செய்திகள்
சித்தரிப்பு படம்

ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு இடையில் துப்பாக்கி சண்டை - 9 பேர் பலி

Published On 2019-09-14 14:09 GMT   |   Update On 2019-09-14 14:09 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் போலீசாருக்கு இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட ஷா வாலி கோட் மாவட்டம், தமானி என்ற இடத்தில் நேற்றிரவு இரு போலிசார் தங்களுடன் பணியாற்றும் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த 9 போலீசார் பரிதாபம்மாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்தில் இதே மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 போலீசார் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

Tags:    

Similar News