செய்திகள்
குண்டு வெடித்த பகுதி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தாக்குதல்- 5 பேர் பலி

Published On 2019-09-05 09:21 GMT   |   Update On 2019-09-05 09:21 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இன்று மீண்டும் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளில் சுமார் 5000 வீரர்களை திரும்ப பெறுவது தொடர்பாக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக தலிபான் அமைப்பு கூறியதையடுத்து இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இது ஒருபுறமிருக்க ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் நடந்தவண்ணம் உள்ளன.

அவ்வகையில் இன்று காபூல் நகரில் பல்வேறு முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள ஷாஷ் தரக் பகுதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 25 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதேபோல் திங்கட்கிழமை கிழக்கு காபூல் குடியிருப்பு பகுதியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News