செய்திகள்
வட கொரிய தூதரக பிரதிநிதி ரி யோங்-ஹோ மற்றும் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி

ஹாங்காங் போராட்டம் - சீனாவிற்கு வடகொரியா ஆதரவு

Published On 2019-09-03 09:44 GMT   |   Update On 2019-09-03 09:44 GMT
ஹாங்காங் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டிற்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பீஜிங்:

ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தும் புதிய சட்டம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் தலைவர் அறிவித்தார். ஆனால் முழுமையாக அந்த சட்டத்தை கைவிட வலியுறுத்தியும், புதிதாக தேர்தலை நடத்தக் கோரியும் போராட்டம் தொடர்கிறது. தங்கள் உரிமையில் சீனா தேவையின்றி தலையிடுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, வட கொரிய தூதரக பிரதிநிதி ரி யோங்-ஹோவை நேற்று பியோங்யாங் நகரில் சந்தித்து பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

சந்திப்பின்போது, “ஹாங்காங் நகரம் சீனாவினுடையது ஆகும். இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது" என்று ரி யோங் கூறியதாக அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது, இரு மந்திரிகளும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடர்புகளை முன்னெடுக்க ஒப்புக்கொண்டனர்.

வடகொரியா நடத்தி வரும் ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு 2017 ஆம் ஆண்டிலிருந்தே சீனா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News