செய்திகள்
ராணி எலிசபெத்

அக்டோபர் 14ம் தேதி வரை பிரிட்டன் பாராளுமன்றம் முடக்கம் - ராணி எலிசபெத் ஒப்புதல்

Published On 2019-08-28 14:52 GMT   |   Update On 2019-08-28 14:52 GMT
பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் மாதம் 14-ம் தேதி வரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
லண்டன்:

ஐரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது.

வரும் அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என சமீபத்தில் பொறுப்பேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.



இதற்கிடையே, அக்டோபர் மாதம் 14-ம் தேதி வரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராணி எலிசபெத்துக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்று ராணி எலிசபெத், பிரிட்டன் பாராளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tags:    

Similar News