செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட பார்

மெக்சிகோ - பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 23 பேர் பலி

Published On 2019-08-28 10:26 GMT   |   Update On 2019-08-28 11:09 GMT
மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பெண்கள் உள்பட 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மாஸ்கோ:

மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற பார் செயல்பட்டு வருகிறது.

நேற்றிரவு இந்த பாரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News