செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் காயமடைந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் பாகிஸ்தான் நாட்டு தூதரகம் உள்ளது. நேற்று இரவு தூதரகம் அருகே திடீரென வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர். தூதரக பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, என்றனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் ஜலாலாபாத் பகுதிகளில் சமீப காலமாக இது போன்ற பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.