செய்திகள்
தாக்குதல் நடந்த பகுதி

சோமாலியா - ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 11 பேர் சுட்டுக்கொலை

Published On 2019-08-21 11:33 GMT   |   Update On 2019-08-21 11:33 GMT
சோமாலியா நாட்டில் ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 11 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
மொகடிஷு:

சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு படைகள் ஈடுபட்டு வருகிறது. இதனால் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பயங்கர மோதல்கள் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோஹர் நகரின் ஷிம்பீரோ கிராமத்தில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. இந்த மோதல் சம்பவத்தின் இறுதியில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News