செய்திகள்
விபத்தில் சிக்கிய வாகனங்கள் தீப்பிடித்து எரியும் காட்சி

உகாண்டாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்தது- 20 பேர் பலி

Published On 2019-08-19 02:57 GMT   |   Update On 2019-08-19 02:57 GMT
உகாண்டாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் பலியாகினர்.
மாஸ்கோ:

கென்யாவில் இருந்து காங்கோவிற்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி உகாண்டாவின் மேற்கு பகுதியில் உள்ள ருபிரிசி மாவட்டத்தில், லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியது. 

மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. அருகில் உள்ள கடைகள், சிறிய ஸ்டால்களும் தீப்பிடித்தன.

இந்த விபத்தில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News