செய்திகள்
பூடானில் மாங்டெச்சு நீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பூடான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷெரிங் லோட்டேவுடன் இணைந்து மாங்டெச்சு நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார்.
திம்பு:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பூடான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், நண்பகல் பூடான் சென்றடைந்தார்.
பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். ஒரு குழந்தை பூச்செண்டு கொடுத்து மோடியை வரவேற்றது. பின்னர் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி, பூடான் நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்கை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து, மாங்டெச்சு நீர்மின் நிலையத்தை இன்று அவர் திறந்து வைத்தார். மேலும், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக தபால் தலைகளையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பூடான் பிரதமர் ஷெரின் லோட்டே உள்பட முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.