செய்திகள்
ஆப்கானிஸ்தானில் ராணுவம் வான் தாக்குதல்- 6 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி வான் தாக்குதலில் 6 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மாஸ்கோ:
உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் இன்னும் சில பகுதிகளில் தலிபான்கள் முழு அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார், சிறப்பு படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை மீட்க, ராணுவம் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவ்வகையில், நேற்று இரவு காஸ்னி மாகாணத்தில் உள்ள ஹட்டா கிராமத்தில் தலிபான்கள் மறைவிடங்களை குறிவைத்து விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
இதேபோல் ஞாயிற்றுக்கிழமை பால்க் பகுதியில் நடத்திய தாக்குதலில் 15 தலிபான்கள் இறந்தனர். இத்தகவலை உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.