செய்திகள்
ஜப்பானில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டரில் 5.4 அலகாக பதிவு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.4 அலகாக பதிவாகியுள்ளது.
டோக்கியோ:
ஜப்பானில் கடந்த மாதம் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் 5 முறை சராசரியாக 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதேபோல் கடந்த ஜூன் மாதத்தில் 55 முறையும், கடந்த வருடத்தில் மட்டும் 742 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டோஹோகு பகுதியில் உள்ள ஆமோரி நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 90 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.