செய்திகள்
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
டோக்கியோ:
புவிசார் அமைப்பின்படி, அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் ‘நெருப்பு வளையம்’ பகுதிக்குள் அமைந்துள்ள ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் சிறியதாகவும் பெரிதாகவும் பல நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
அவ்வகையில், அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் புக்கிஷிமா மற்றும் மியாகி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.