செய்திகள்
1968-ம் ஆண்டு காணாமல் போன நீர் மூழ்கி கப்பலின் புகைப்படம்

பிரான்சில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நீர்முழ்கி கப்பல் கண்டுபிடிப்பு

Published On 2019-07-23 13:46 GMT   |   Update On 2019-07-23 13:46 GMT
பிரான்ஸ் நாட்டில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நீர்முழ்கி கப்பல் பல கட்ட தேடுதலுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான மினர்வ் என்ற நீர்மூழ்கி கப்பல் 1968-ம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் 52 மாலுமிகளுடன் பயணித்தது. கப்பல் அந்நாட்டின் தெற்கு கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

இதையடுத்து, காணாமல் போன கப்பலையும் அதில் பயணித்த மாலுமிகளின் நிலையையும் கண்டறிய பல கட்டங்களாக தேடுதல் பணி நடைபெற்றது. ஆனாலும் நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது என கண்டறிய முடியாததால் தேடுதல் பணி கைவிடப்பட்டது.

இதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி டிரோன்கள் உதவியுடன் மீண்டும் கப்பலை தேடும் பணி கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அந்நாட்டின் டூலோன் பகுதியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள மத்திய தரைக்கடலில் 2370 அடி ஆழத்தில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்படுள்ளதாக தேடுதல் குழுவினர் மற்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



அரை நூற்றாண்டுக்கு முன்னர் 52 மாலுமிகளுடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் தீவிர தேடுதல்களுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த கப்பலில் பயணித்த மாலுமிகளின் குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News