செய்திகள்
வெடிகுண்டு தாக்குதல் நடந்த மருத்துவமனை

பாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி

Published On 2019-07-21 06:07 GMT   |   Update On 2019-07-21 06:07 GMT
பாகிஸ்தான் நாட்டின் தலைமை மருத்துவமனையில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் உள்ளது தேரா இஸ்மாயில் கான் தலைமை மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News