செய்திகள்
போர் விமானங்கள் குண்டு வீசும் காட்சி.

ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2019-07-10 10:25 GMT   |   Update On 2019-07-10 10:25 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் மாகாணத்தில் அரசுப் படைகள் வான்வழி மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குன்டுஸ் மாகாணத்தின்  இமாம் சாஹிப் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆப்கானிஸ்தான் விமானப்படை மற்றும் தரைப்படைகள் நேற்று பின்னிரவில் நடத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என வடக்கு பிராந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் குலாம் ஹஸ்ரத் கரிமி இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News