செய்திகள்
அலி சர்தாரி

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதியின் பேட்டி பாதியில் நிறுத்தம்

Published On 2019-07-03 01:59 GMT   |   Update On 2019-07-03 01:59 GMT
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அலி சர்தாரியின் பேட்டி நிகழ்ச்சி தொடங்கிய 5 நிமிடத்தில் திடீரென நிறுத்தப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இஸ்லாமாபா :

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அலி சர்தாரி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் எம்.பி.யாக இருக்கும் அவருக்கு பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அப்படி அவர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது, பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய 5 நிமிடத்தில் திடீரென ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

அதற்கு பதிலாக மற்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதன் பின்னர் அலி சர்தாரியின் பேட்டி இனி ஒளிபரப்பப்படாது என அந்த தொலைக்காட்சி அறிவித்தது. இதற்கான முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், பிரதமர் இம்ரான் அரசு ஊடக சுதந்திரத்தில் தலையீடுவதாக கூறி கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
Tags:    

Similar News