செய்திகள்
ஈரான் அணு உலை கூடம்

ஈரான் அளவுக்கதிகமாக யூரேனியம் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.முகமை அறிவிப்பு

Published On 2019-07-01 14:44 GMT   |   Update On 2019-07-01 14:44 GMT
சர்வதேச அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை அத்துமீறும் வகையில் ஈரான் அரசு 300 கிலோவுக்கும் அதிகமாக செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை கையிருப்பில் வைத்துள்ளதாக ஐ,நா.முகமை தெரிவித்துள்ளது.
வியென்னா:

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தன. அந்த தடையை நீக்க வேண்டுமானால் சர்வதேச அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை ஈரான் பின்பற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

தன்வசமுள்ள அணு ஆயுதங்களையும், அணு தயாரிப்பு திட்டங்களையும் அழிக்க முதலில் மறுத்த ஈரான், பின்னர் சர்வதேச நெருக்கடிக்கு பணிந்தது. இதையடுத்து, அணு செறிவூட்டல் மற்றும் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக்கொள்வதாக ஈரான் அறிவித்தது.

இதையடுத்து, சர்வதேச அணு ஆயுத தடை முகைமையை சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஓராண்டு காலம் ஈரானில் முகாமிட்டு அங்குள்ள அணு உற்பத்தி தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தினார்கள். மின் உற்பத்தி உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளுக்காக செயல்பட்டுவரும் திட்டங்களை தவிர பிற அணு ஆயுத தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

பின்னர், எக்காரணத்தை கொண்டும் எவ்வித நோக்கத்துக்காகவும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அணு செறிவூட்டல் மற்றும் யூரேனியம் செறிவூட்டல் ஆகியவற்றில் ஈரான் அரசு ஈடுபட கூடாது என வலியுறுத்தப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு இதற்கான சர்வதேச அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட்டது.

அணுஉலை கூடத்தின் உள்பகுதி
ஆனால், சர்வதேச அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை அத்துமீறும் வகையில் ஈரான் அரசு 300 கிலோவுக்கும் அதிகமான அளவில் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை கையிருப்பில் வைத்துள்ளதாக வியென்னாவில் இயங்கிவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத பரவல்கண்காணிப்பு முகமை இன்று கவலை தெரிவித்துள்ளது.

இந்த தகவலை ஈரான் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News