செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள்- பாகிஸ்தான் முடிவு

Published On 2019-06-20 10:30 GMT   |   Update On 2019-06-20 10:30 GMT
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்களை அமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. ஆசிட்வீச்சு, கடத்தல், கற்பழிப்பு,  கவுரவ கொலை போன்ற குற்றங்கள் நாளடைவில் பெருகி வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க 1,016 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தெரிவித்துள்ளார். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு நீதிமன்றம் இருக்கும். பிற நீதிமன்றங்களை விட இது மாறுபட்டதாகும். பெண்கள் இங்கு எந்தவித  பயமுமின்றி புகார் அளிக்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News