செய்திகள்

ஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9 தலிபான் பயங்கரவாதிகள் பலி

Published On 2019-06-18 11:14 GMT   |   Update On 2019-06-18 11:14 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப்பகுதியில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தின் அண்டார் பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

ஆப்கன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தளபதி உள்பட 9 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News