செய்திகள்

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை

Published On 2019-06-17 05:49 GMT   |   Update On 2019-06-17 05:49 GMT
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூயார்க்:

அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் சுங்காரா (44). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 15 மற்றும் 10 வயதுள்ள 2 மகன்களுடன் தங்கியிருந்தார். இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் 4 பேரின் பிணங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த 4 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. எனவே அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அவர்களை சுட்டுக் கொன்றது யார்? எதற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.
Tags:    

Similar News