செய்திகள்

அமெரிக்காவில் விற்பனை நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு

Published On 2019-06-15 20:18 GMT   |   Update On 2019-06-15 20:18 GMT
அமெரிக்காவில் விற்பனை நிறுவனத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டின்போது ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள கரோனாவில், உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்கிற மொத்த விற்பனை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த நிறுவனத்தில் ஒரு குழந்தையுடன் வந்த பெண்ணுக்கும், வெள்ளைக்காரர் ஒருவருக்கும் இடையே வாய்த்தகராறு மூண்டது.

இந்த தகராறு முற்றியபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் அதிர்ந்து போன மக்கள் பதற்றத்துடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். எனினும் துப்பாக்கிச்சூட்டின்போது ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.இது குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டையும், அதில் ஒருவர் பலியானதையும் உறுதி செய்தனர். ஆனால் கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்த அனைவரையும் போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.

துப்பாக்கிச்சூடு நடந்தபோது அங்கிருந்து மக்கள் பதற்றத்துடன் வெளியேறியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலரும் கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News