செய்திகள்

லிபியா உள்நாட்டு போர் - இருதரப்பு மோதலில் 42 பேர் பலி

Published On 2019-06-15 02:21 GMT   |   Update On 2019-06-15 02:21 GMT
லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 42 பேர் பலியாகினர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
திரிபோலி:

லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். 
 
அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 42 அப்பாவி மக்கள் பலியாகினர். 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐநா அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News