ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்து பயணத்திற்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து அனைத்து மாநில நிதி மந்திரிகளுடன் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ஆலோசனை நடத்தி வருகிறது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சீர்திருத்தங்களை செய்து வருகிறது. மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று ஒரு சில தொழில், பொருட்களுக்கு வரி விதிப்பை குறைத்தும், சிலவற்றிற்கு அதிகரித்தும் செயல்படுத்துகின்றன.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில மாற்றங்களை மத்திய அரசு ஜனவரி 1-ந்தேதி முதல் கொண்டு வருகிறது. ஆன்லைன் வழியாக முன் பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்து சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. புதிதாக விதிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரெயில், ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்து பயணத்திற்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
அதன்படி வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல் வாடகை கார்களை புக் செய்யும்போது அதற்கு பயணிகள் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும்.
இதுவரையில் ஓலா, ஊபர், கார்களுக்கும் ஆட்டோக்களுக்கும் செல்லக்கூடிய இடத்திற்கு கிலோ மீட்டர் கணக்கிடப்பட்டு வாடகை கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டது. இனிமேல் அதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. கூடுதலாக வசூலிக்கப்படும்.
ஆம்னி பஸ்களில் ஏ.சி. பஸ்களுக்கு மட்டும் ஏற் கனவே 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. 1-ந்தேதி முதல் குளிர்சாதன வசதி இல்லாத ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யப்படுகிற பஸ்களுக்கும் புதிதாக ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது.
காலணி மற்றும் ரெடிமேடு மற்றும் அனைத்து ஜவுளி வகைகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காட்டன் துணி வகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.