பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
பதிவு: நவம்பர் 23, 2020 07:24
ராமதாஸ்
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பேரறிவாளன் விடுதலைக்கும், எம்.டி.எம்.ஏ. விசாரணைக்கும் தொடர்பு இல்லை. விசாரணை அறிக்கையை கவர்னருக்கு தர மாட்டோம். கவர்னர் தன்னிச்சையாக
முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. கூறியிருக்கிறது. இது மிகச்சரியான நிலைப்பாடு ஆகும். எம்.டி.எம்.ஏ. விசாரணைக்கும் பேரறிவாளன்
விடுதலைக்கும் தொடர்பு இல்லை என சி.பி.ஐ. கூறிவிட்ட நிலையில், சொத்தை காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், மற்ற 6
தமிழர்கள் விடுதலை குறித்தும் தமிழக கவர்னர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.