ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்
பதிவு: நவம்பர் 16, 2020 16:20
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தடை தொடரும் எனவும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும், ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதி கோர கூட அந்நிறுவனத்திற்கு எந்தவிதமான முகாந்திரமும் கிடையாது எனவும் தமிழக அரசு குறிப்பிட்டது.
Related Tags :