40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றுவதற்காகவே அவசரகதியில் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றதாக கூறிய மத்திய முன்னாள் மந்திரியின் கருத்துக்கு தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல் மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த 40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவதற்காகவே சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லாதது தெரிந்திருந்தும் ஒரு நாடகம் நடத்தி தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டதாக மத்திய முன்னாள் மந்திரியும் பாஜக எம்.பி.யுமான அனந்த்குமார் ஹெக்டே பேசியிருந்தார்.