இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 பேரில் சுமார் 80 சதவீதம் மக்கள் வாக்களித்திருந்தனர்.
நேற்றிரவு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் முடிவடைந்தது.
ஆளும்கட்சி வேட்பாளராக அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசா 41.99 சதவீதம் (55 லட்சத்து 64 ஆயிரத்து 239) வாக்குகளை பெற்றார்.