தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் வெளிமாநில வீரர்களை சேர்க்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.#TNPL #OutsidePlayersInTNPL
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது சீசன் போட்டி இன்று தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக்சூப்பர் கில்லீஸ், முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், டிஎன்பிஎல் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை சேர்க்க அனுமதி அளிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். #TNPL #OutsidePlayersInTNPL