தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் குப்பை அள்ளும் பணி கூட தனியாரிடம் என்றால் அரசுக்கு என்ன வேலை?- சீமான்

Published On 2025-08-10 12:47 IST   |   Update On 2025-08-10 12:47:00 IST
  • போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து சீமான் ஆதரவு தெரிவித்தார்.
  • மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் மேயர் பதவி எதற்கு?

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து பேசிய சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* நகரை சுத்தமாக்கும் தூய்மை பணியை தனியார் இடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

* தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குப்பை அள்ளும் பணியை கூட தனியாரிடம் என்றால் அரசுக்கு என்ன வேலை?

* எல்லாம் தனியார் மயம் எனில் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்வது ஏன்?

* மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் மேயர் பதவி எதற்கு?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News