கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை முன்பே எச்சரித்தோம் - மு.க.ஸ்டாலின்
- காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி, பிரசார வாகனம் முன்னோக்கி சென்றது.
- நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் கூட்டத்திற்குள் வரவில்லை.
கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே, விஜயை பின் தொடர்ந்து ஏராளமானோர் வந்தனர்.
* அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் பேசுவோம் என த.வெ.க. ஏற்பாட்டாளர்கள் பிடிவாதம் பிடித்தனர்.
* கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
* காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி, பிரசார வாகனம் முன்னோக்கி சென்றது.
* நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் கூட்டத்திற்குள் வரவில்லை.
* அக்சயா மருத்துவமனை அருகே வாகனத்தை நிறுத்தி பிரசாரம் செய்யுமாறு முன்பே அறிவுறுத்தினோம்.
* கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்கத்தான் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தது.
* கரூர் துயரத்தை கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை
* மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது த.வெ.க. தொண்டர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கியதால் மீட்புப்பணிகள் பாதித்தது.
* கரூர் சம்பவத்திற்கு முன்பு அதே இடத்தில் இ.பி.எஸ். தலைமையிலான 2 கூட்டங்கள் அசம்பாவிதம் இல்லாமல் சிறப்பாக நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.