தமிழ்நாடு செய்திகள்

தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-10-12 17:33 IST   |   Update On 2025-10-12 17:33:00 IST
  • தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
  • வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.

நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அது புரளி என்றும் தெரிய வந்தது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்மநபர் ஒருவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைதொடர்ந்து, உடனடியாக தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News