தமிழ்நாடு

சென்னை தனியார் நிறுவனத்தில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு

Published On 2022-07-03 02:35 GMT   |   Update On 2022-07-03 02:35 GMT
  • திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் பரவியதில் 2 ஊழியர்கள் உடல் கருவி உயிரிழந்துள்ளனர்.
  • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மேலும், சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் சிக்கி கோபிநாத், சதீஷ் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் பரவியதில் 2 ஊழியர்கள் உடல் கருவி உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News