தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு- நோட்டீஸ் 6 லட்சம் வீடுகளுக்கு வினியோகம்

Published On 2022-07-02 08:48 GMT   |   Update On 2022-07-02 08:48 GMT
  • சொத்தின் உரிமையாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படுகிறது.
  • திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மேலும் 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படும்.

சென்னை:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு மாநகராட்சி மன்றமும் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து சொத்து வரி உயர்வு நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு வீடுகளுக்கும் உயர்த்தப்பட்ட சொத்து வரி எவ்வளவு என்ற விவரத்துடன் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சொத்து வரி விவரமும் அடங்கிய நோட்டீஸ் வருவாய் துறை மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய இந்த பணி இந்த மாதம் வரை நடக்கிறது. சொத்தின் உரிமையாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இதுவரையில் 6 லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்வு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் 13 லட்சம் சொத்து வரி உரிமையாளர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மேலும் 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படும்.

புதிய சொத்து வரி உயர்வு அச்சடிக்கப்பட்டு வர வர தபால் மூலம் வழங்கப்படுகிறது.

அதனை பெற்றுக் கொண்ட சிலர் சொத்து வரி செலுத்த தொடங்கி விட்டனர். ஒரு சிலர் மட்டும் தான் விளக்கம் கேட்கிறார்கள். அவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படுவதால் புரிந்து கொள்கிறார்கள். எவ்வித குழப்பத்திற்கும் இடம் அளிக்காமல் விவரங்கள் வழங்கப்படுவதால் ஏற்றுக் கொண்டனர்.

மீதமுள்ள 5 லட்சம் பேருக்கு படிப்படியாக சொத்து வரி நோட்டீஸ் வினியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News