தமிழ்நாடு

தென்காசியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மீண்டும் போஸ்டர்கள்

Published On 2022-07-04 06:24 GMT   |   Update On 2022-07-04 06:24 GMT
  • இருவரது ஆதரவாளர்களும் தனித்தனியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவர்களது ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.

தென்காசி:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவர்களது ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.

தென்காசி மாவட்டத்திலும் இருவரது ஆதரவாளர்களும் தனித்தனியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.

Similar News