தமிழ்நாடு

குலசேகரம் அருகே கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை

Published On 2022-07-01 04:37 GMT   |   Update On 2022-07-01 04:37 GMT
  • சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண்ஐசக் (வயது 35), பிளம்பர். இவரது மனைவி சந்தியா (32).
  • கணவன்-மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

திருவட்டார்:

குலசேகரம் அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண்ஐசக் (வயது 35), பிளம்பர். இவரது மனைவி சந்தியா (32).

இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ஜாண் ஐசக்கிற்கு சரிவர வேலை இல்லாததால் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி இருந்தார். சுய உதவிக்குழுவிலும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு பக்கத்து தெருவில் வசிக்கும் சந்தியாவின் அக்கா அவருக்கு போன் செய்தார். வெகு நேரமாகியும் போன் எடுக்காததால் அவரின் மகன் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது சந்தியா தூக்கில் தொங்கினார். இது குறித்து தனது தாயாருக்கும் குலசேகரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். தக்கலை டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஜாண்ஐசக் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். சந்தியா தூக்கில் பிணமாக தொங்கினார். இருவரின் பிணத்தை கைப்பற்றி போலீசார் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன்-மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி உடல் பிரேத பரிேசாதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.

கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏறபடுததி உள்ளது.

Tags:    

Similar News