தமிழ்நாடு செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கு மூக்கு வழியாக செலுத்தும் 3 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து- பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியது

Published On 2023-02-06 11:34 IST   |   Update On 2023-02-06 11:34:00 IST
  • பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது.
  • இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தின் 3 லட்சம் டோஸ்கள் இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை:

பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது.

'இன்கோவாக்' எனப்படும் இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி 'இன்கோவாக்' கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போது கோவின்-ல் கிடைக்கிறது.

இன்கோவாக் மருந்தின் தனியார் சந்தை விலை ரூ.800-க்கும், அரசு வினியோகத்துக்கான விலை ரூ.325 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தின் 3 லட்சம் டோஸ்கள் இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "2 நாட்களுக்கு நாங்கள் சில தனியார் மருத்துவமனைகளுக்கு 3 லட்சம் டோஸ் இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பியுள்ளோம். சில நாடுகள் இந்த தடுப்பு மருந்துகளுக்காக எங்களை அணுகியுள்ளன," என்றார்.

Tags:    

Similar News