ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந்தேதி நடக்கிறது.
- முன்னாள் எம்.எல்.ஏ. ஆசைத்தம்பி, சிவா. ராஜமாணிக்கம், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடம் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் கீழ்கண்டவர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
கழக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.பி, டாக்டர் கே.கோபால், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி மற்றும் அமைப்பு செயலாளர்கள் முன்னாள் எம்.பி. ரத்தினவேல், முன்னாள் எம்.எல்.ஏ. ஆசைத்தம்பி, சிவா. ராஜமாணிக்கம், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.