தமிழ்நாடு
ராமேசுவரம் மீனவர்களுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய அண்ணாமலை
- முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வீட்டிற்கு அண்ணாமலை சென்றார்.
- அப்துல் கலாம் பேரன் சேக் சலீம் மற்றும் உறவினர்களிடம் அண்ணாமலை நலம் விசாரித்தார்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் மீனவர்களுடன் 75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்காக தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்திற்கு நேற்று வந்தார். அவர் ராமகிருஷ்ணா மடத்தில் இரவு தங்கினார்.
இன்று காலையில் அண்ணாமலை ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வீட்டிற்கு சென்றார். அங்கு அப்துல் கலாம் பேரன் சேக் சலீம் மற்றும் உறவினர்களிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் அவரது வீட்டிற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதன் பிறகு ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்பிடி விசைப்படகில் மீனவர்களுடன் தேசிய கொடியுடன் கடலில் பயணம் செய்து சுதந்திர தினவிழாவை கொண்டாடினார்.