தமிழ்நாடு
ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம்- மு.க.ஸ்டாலின்
- உயிரைக் கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
- அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம்.
சென்னை:
சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
குமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்த இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒரு தாய் மக்களாக உணர்ந்து பாடுபட்டதால் கிடைத்தது இந்த விடுதலை. ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமை உணர்வால் தான் காக்க முடியும். இதுதான் உயிரைக் கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
75 ஆண்டு கால விடுதலை இந்தியாவின் வரலாற்றை - மேல் நோக்கி நகர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து - ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம்.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.